கேளடி என் தோழி...
உரக்கச் சொல்லிவிட்டால்
பிழையாய்த் தோன்றுமென்று
குரல் இறக்கிச் சொல்லுகிறேன்
கேளடி என் தோழி...
ஊரென்பார் பேரென்பார்
உயர்ந்த தமிழ்க் குடியென்பார்
ஊருக்குள் சாதிசொல்லி
ஒதுக்கிடுதல் யார்சொல்வார்?
உறவென்பார் நட்பென்பார்
ஒன்றுக்குள் ஒன்றென்பார்
துயரத்தில் உதவிகேட்டால்
கதவடைத்துப் போய்விடுவார்...
ஆணென்பார் பெண்ணென்பார்
அம்மையப்பன் ஒன்றென்பார்
அடுக்களையில் பெண்ணினத்தை
அடைத்து வைத்தல் விதியென்பார்...
நாடென்பார் இனமென்பார்
நாட்டுமக்கள் சமமென்பார்
மற்றநாட்டுப் பெண்கள்வந்தால்
மானபங்கம் செய்திடுவார்...
ஏடென்பார் எழுத்தென்பார்
எண்ணெழுத்தும் கண்ணென்பார்
கல்விக்கண் கொடுப்பதற்கும்
கையூட்டுக் கேட்டிடுவார்...
இன்னமும் நான் சொல்லிடுவேன்
யாருமிதைக் கேட்டுவிட்டால்
இந்தியரின் எதிரியென்று
ஏளனமும் செய்திடுவார்!!!
பிழையாய்த் தோன்றுமென்று
குரல் இறக்கிச் சொல்லுகிறேன்
கேளடி என் தோழி...
ஊரென்பார் பேரென்பார்
உயர்ந்த தமிழ்க் குடியென்பார்
ஊருக்குள் சாதிசொல்லி
ஒதுக்கிடுதல் யார்சொல்வார்?
உறவென்பார் நட்பென்பார்
ஒன்றுக்குள் ஒன்றென்பார்
துயரத்தில் உதவிகேட்டால்
கதவடைத்துப் போய்விடுவார்...
ஆணென்பார் பெண்ணென்பார்
அம்மையப்பன் ஒன்றென்பார்
அடுக்களையில் பெண்ணினத்தை
அடைத்து வைத்தல் விதியென்பார்...
நாடென்பார் இனமென்பார்
நாட்டுமக்கள் சமமென்பார்
மற்றநாட்டுப் பெண்கள்வந்தால்
மானபங்கம் செய்திடுவார்...
ஏடென்பார் எழுத்தென்பார்
எண்ணெழுத்தும் கண்ணென்பார்
கல்விக்கண் கொடுப்பதற்கும்
கையூட்டுக் கேட்டிடுவார்...
இன்னமும் நான் சொல்லிடுவேன்
யாருமிதைக் கேட்டுவிட்டால்
இந்தியரின் எதிரியென்று
ஏளனமும் செய்திடுவார்!!!
அருமையான கவிதை சகோதரி. இந்தியர்களின் நிலைமை இப்படி இருக்கிறது!
பதிலளிநீக்குநன்றி ரங்கன்!
பதிலளிநீக்கு