வந்திடுவேன் விரைவினிலே...
பனிவிழும் மெல்லிரவு
பால்குளித்த வெண்ணிலவு
இன்னுமா உறங்கவில்லை
என்னவளே இளம்பிறையே...
விஞ்சும் குளிர்பொறுக்காமல்
விரிந்திருந்த மலர்களெல்லாம்
அஞ்சியே இதழ்குவித்து
அமைதியாய் உறங்குதடி
கொஞ்சிடும் கிளிகளெல்லாம்
கூட்டுக்குள் அடைந்தபடி
பஞ்சனைய பெண்கிளியின்
மென்சிறகில் ஒளியுதடி
வஞ்சியர்போல் சலங்கைபூண்டு
விளையாடும் பசுங்கன்று
தஞ்சமெனத் தாயருகில்
பிஞ்சுமுகம் புதைக்குதடி
நெஞ்சினிக்கும் இனியவளே
நெடுமூச்சில் உயிர்கொதித்து
வஞ்சிநீயும் வருந்தாதே
வந்திடுவேன் விரைவினிலே...
பால்குளித்த வெண்ணிலவு
இன்னுமா உறங்கவில்லை
என்னவளே இளம்பிறையே...
விஞ்சும் குளிர்பொறுக்காமல்
விரிந்திருந்த மலர்களெல்லாம்
அஞ்சியே இதழ்குவித்து
அமைதியாய் உறங்குதடி
கொஞ்சிடும் கிளிகளெல்லாம்
கூட்டுக்குள் அடைந்தபடி
பஞ்சனைய பெண்கிளியின்
மென்சிறகில் ஒளியுதடி
வஞ்சியர்போல் சலங்கைபூண்டு
விளையாடும் பசுங்கன்று
தஞ்சமெனத் தாயருகில்
பிஞ்சுமுகம் புதைக்குதடி
நெஞ்சினிக்கும் இனியவளே
நெடுமூச்சில் உயிர்கொதித்து
வஞ்சிநீயும் வருந்தாதே
வந்திடுவேன் விரைவினிலே...
கருத்துகள்
கருத்துரையிடுக