சக்தி கொடு...

பழகிப் போனதிங்கு
பாசத்தின் வலிகள்
விலகிப் போனதின்று
வாழ்க்கையில் கிலிகள்

மண்ணில் பிறந்தமுதல்
கண்ணுக்கு இமைபோல
என்னுடைய உறவுகளை
அரவணைத்துக் காத்திருந்தேன்

தண்ணீர் குடித்துமட்டும்
பசியை விழுங்கிவிட்டு
கண்ணுறக்கம் தொலைத்தும்கூட
தொடர்ச்சியாய் தினமுழைத்தேன்

உழைத்துச் சேர்த்ததெல்லாம்
மறைக்காமல் கொடுத்திருந்தும்
என்ன கொடுத்தாயென்று
என்னைச் சிதைக்கிறது

என்னுடைய பரம்பொருளே
இன்னுமொரு பிறவிகொடு
போதுமென்று சொல்லும்வரை
பொருள்குவிக்கும் திறமைகொடு

மண்ணுலகில் வாழும்வரை
என்னுறவைச் சேர்த்தணைக்க
திண்ணியதோர் இதயம்கொடு
தினம்புதிதாய் சக்திகொடு...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!