எங்கிருந்து வந்தாய் நீ?!!

காலைப்பொழுதின்
கறுத்த விடியலில்
என்னைப் பரிகசிக்க
எனக்குமுன் இறங்கிவந்து
என்வீட்டுப் பூக்களை
வருடிக்கொண்டு நிற்கிறாயே,
எங்கிருந்து வந்தாய் நீ?
யாருன்னைக் கொண்டுவந்தார்?

நீ மேகத்தின் மிச்சமோ?
வானத்தின் வரமோ?
தேவலோகம் திறந்துவந்த
தெய்வீக அமுதமோ?
இரவுக்குப் பரிசளித்த
விடியலின் முத்தமோ?

நேற்று நான் தெளித்தநீரை
கதிரால் உறிஞ்சிவிட்டுக்
கதிரவன் பரிசளித்த
காதல் பன்னீரோ?
வெண்ணிலவு உடல்குளித்த
தண்ணீரின் மிச்சமோ?

சொல்லிடு பனித்துளியே
மனதை
அள்ளிடும் நீர்த்துளியே!

கருத்துகள்

  1. // இரவுக்குப் பரிசளித்த
    விடியலின் முத்தமோ?//

    //வெண்ணிலவு உடல்குளித்த
    தண்ணீரின் மிச்சமோ?//

    அருமையான வரிகள்! கலக்கி இருக்கீங்க!! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள் தோழரே!

    வாழ்த்துக்களுக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!