நியாயமோ சொல்...

நேற்றைய நினைவுகள்
நெஞ்சில்
வடுவாகப் பதிந்ததால்
காற்றும்கூட இன்று
கனமாகத் தெரியுதடி...

ஊற்றுத் தண்ணீரென்று
உன்னை நினைத்திருக்க
ஆற்று வெள்ளமெனக்
கடலில் கலந்துவிட்டாய்...

போனதுதான்போனாய்
படுத்தாமல் போனாயா
வானவெளி யெங்குமுன்னை
விதைத்துவிட்டுப் போய்விட்டாய்...

காணுமிடமெல்லாம்
நீயே நிறைந்துகொண்டு
வாழவிடாமல் எனை
விரட்டுவதும் நியாயமோ???

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!