மேகத்திற்கும் காதல் உண்டு
கருவுற்ற மேகங்கள்
காற்றலையின் கைப்பிடித்து
செறிவுற்ற மலைச்சரிவில்
துளிமழையாய்ப் பிரசவிக்கும்
பெருகியது அருவிவெள்ளம்
பன்மலரின் மணம்பருகி
வழிந்திடும் தேனலையாய்
மண்மடியை நனைத்திறங்கும்
உருகியது மண்ணின்மனம்
உற்சாகம் ஊற்றெடுக்க
விரிந்திடும் ஆற்றுநீராய்
விம்மிக் குமிழியிடும்
வழியெலாம் செழிக்கவைத்து
வளைந்த உடல்களைப்புறவே
சரிந்திடும் கடல்மடியில்
காதல் அங்கு அலைமோதும்.
Nalla fresh feel tharuthu kavithai.... vazhthukkal.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி இனியள்(???)
பதிலளிநீக்குஅருமையான கவிதை. மிகவும் அர்த்தம் பொதிந்த கவிதை. நன்றி சகோதரி.
பதிலளிநீக்குஇயற்கையில் மறைந்திருக்கும் அர்த்தங்கள் ஏராளம் அல்லவா...
பதிலளிநீக்குநன்றி ரங்கன்.