புதுசு கண்ணா புதுசு...

நேற்றைப்போல் இன்றைக்கும்
மாற்றங்கள் இல்லாமல்
மணக்க மணக்க சுவை
விருந்தளிப்பாய் என வந்தேன்...

தோற்றுப் போனேன்
உன்
தோற்றத்தின் புதுமையில்...

ஆற்றுநீர்ப் புதுவெள்ளம்
ஏற்றுவந்த மலரலைபோல்
தமிழ்க்
காற்றுக்குப் புது சுகந்தம்
கற்றுத்தரவந்த
சேற்றிதழ்த் தாமரையே

மாற்றம் கண்ட தமிழ்மணமே
மயங்கினேன் உன் அழகில்...

கருத்துகள்

  1. அட...திரட்டியப் பாராட்டி ஒரு கவிதை!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வாங்க சுரேகா...

    வாழ்த்துக்களுக்கு நன்றியோ நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!