இடுகைகள்

செப்டம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊடல்

படம்
ஏக்கம் தடவிய இறுக்கமான மௌனம் தூக்கம் தொலைத்தவிழி தழுவிட மறுக்கும் பார்க்கவும் கூடாமல் விழிகள் விலகிட நோக்கிச் சுவரினை நெஞ்சம் தவிக்கும் உடைந்த வார்த்தைகள் ஊனமாய்த் தடைபட தகிக்கும் அமைதியோ தாண்டவம் ஆடும் புரளும் அசைவுகள் எதிர்பார்ப்பை விதைத்திட ஏமாற்றம் வந்து இதயத்தை மூடும் நடந்த நிகழ்வினை நினைவில் படரவிட்டு இடைஞ்சலின் காரணம் புரியாமல் துவளும் இறுக்கம் தொலைத்திட வருத்தமாய் யோசித்து பாராத பொழுதினில் பார்வையால் வருடும் மனதின் குமுறல்கள் மௌனப் பெருமூச்சாய் மோதி முதுகினில் மெல்லச் சுடுகையில் திரும்பிய விழிகள் நெருங்கிய நிமிஷத்தில் செல்லக் கோபமாய் சிணுங்கல்கள் வெளிப்பட அலையும் காற்றில் கலையும் மேகமாய்த் தொலைந்தது கோபம் தீர்ந்தது மௌனம்!!!