ஊடல்


ஏக்கம் தடவிய
இறுக்கமான மௌனம்
தூக்கம் தொலைத்தவிழி
தழுவிட மறுக்கும்

பார்க்கவும் கூடாமல்
விழிகள் விலகிட
நோக்கிச் சுவரினை
நெஞ்சம் தவிக்கும்

உடைந்த வார்த்தைகள்
ஊனமாய்த் தடைபட
தகிக்கும் அமைதியோ
தாண்டவம் ஆடும்

புரளும் அசைவுகள்
எதிர்பார்ப்பை விதைத்திட
ஏமாற்றம் வந்து
இதயத்தை மூடும்

நடந்த நிகழ்வினை
நினைவில் படரவிட்டு
இடைஞ்சலின் காரணம்
புரியாமல் துவளும்

இறுக்கம் தொலைத்திட
வருத்தமாய் யோசித்து
பாராத பொழுதினில்
பார்வையால் வருடும்

மனதின் குமுறல்கள்
மௌனப் பெருமூச்சாய்
மோதி முதுகினில்
மெல்லச் சுடுகையில்

திரும்பிய விழிகள்
நெருங்கிய நிமிஷத்தில்
செல்லக் கோபமாய்
சிணுங்கல்கள் வெளிப்பட

அலையும் காற்றில்
கலையும் மேகமாய்த்
தொலைந்தது கோபம்
தீர்ந்தது மௌனம்!!!

கருத்துகள்

  1. ஊடல் தொலைத்திடும் சிணுங்கல்கள். இதே சிணுங்கல்கள் ஊடலை கொண்டு வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. ஓ அப்படியும் ஆகுதா?!

    நன்றி ராதாகிருஷ்ணன்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!