விடுதலை நாள்!!!

குண்டு துளைக்காத
கண்ணாடி மேடை
கண்கொத்திப் பாம்பாய்
நாற்புறமும் காவலர்கள்

குண்டுகள் முழங்கி
அதிரும் ஒலியெழும்ப,
எந்த நிமிடத்தில்
எறிகணை விழுமோஎன்று

அச்சத்தில் விரல்நடுங்க
விடுதலைக் கொடியேற்ற,
உச்சத்தில் படபடக்கும்
கொடியுடன் இதயம்கூட!!!

கருத்துகள்

  1. இப்படித்தான்
    நாடு உள்ளது.

    விடுதலை நாள் என்ற உடன்
    வீரர்கள் நினைவிற்கு
    வருவதில்லை
    விடுமுறைதானே
    வருகின்றது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!