கதவாய் ஜன்னலாய்
வாசல்
கடந்துசெல்லா ஜடப்பொருளாய்
பாயாய்த் தலையணையாய்
நாளும்
படுக்கையிலே துணைப்பொருளாய்
தாயாய்த் தாதியுமாய்
வாட்டும்
நோவினிலே கைமருந்தாய்
யாவுமாகி நிறைந்தும்
வீட்டில்
எள்ளளவும் புரிதலில்லை...
மனமிருக்கும் ஜீவனென்று
யாரும்
மதிப்பளிக்க மறந்ததனால்
பொத்திவைத்த சோகமெல்லாம்
உடலில்
புற்றாகி உயிர்குடிக்க,
அஸ்தமித்தாய் ஜோதியே,
இன்று
அழும்குழந்தை துவளுதடி!
Thursday, March 12, 2009
அஸ்தமித்தாய் ஜோதியே...
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment