மழைக் காலத்து மலர்கள்! மெல்ல மழை விலக, வானவில் தோரணத்தை வளைத்துக் கட்டியது வானம்... அதன், வண்ணக் கலவையில் எண்ணம் மயங்கிப்போய், அதில், கொஞ்சத்தைத் திருடியது குளிர்ந்த மழைக்காற்று... கன்னமிட்ட வண்ணத்தைக் கறைபடாமல் ஒளித்துவைக்க, நல்ல இடம் தேடி நாளெல்லாம் அலைந்தது... காட்டுச் செடிகளின் கன்னத்தை வருடிவிட்டுக் கேட்டு இடம்வாங்கிக் கிளைகளுக்குள் புகுந்தது... வாரிச் சுருட்டிய வண்ணக் கலவையை வேருக்கு வெகு அருகில் புதைத்துவிட்டு எழுந்துவர, தன்னை வருடிய காற்றின்மேல் காதலுற்று, சில்லென்று பூத்துச் சிரித்தது பூக்காடு! ***
முதுமை முகத்திலறைகிறது
பதிலளிநீக்குநல்ல கவிதை!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...முதல் வருகைக்கும் சேர்த்து.
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குதிரைகட லோடி
அன்று
திரவியம் தேடிவைத்த
துலுக்காணக் கிழவரின்
அழுக்கான பாத்திரம்
நிரம்பிக் கிடக்கிறது,
மிச்சச் சோறும்
கொச்சை வசவுகளுமாக...
///
முதியவர்கள் பற்றிய கவிதை கண்களில்
நீர் பனிக்கிறது
வாங்க தியாவின் பேனா...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றிகள்!
முதுமையின் கொடுமை, அதை அனுபவிக்கும் முன்பே கண்களில் தெரிகிறது,,
பதிலளிநீக்குநல்ல கவிதை..
வாங்க மலிக்கா...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
அடிக்கடி வாங்க...