என்னோட கதையும் சோகம்தான்!
வெள்ளி செவ்வாய் தவிர
மத்தநாளில் விரதம்
அதுவும்,
வெள்ளை வெறுஞ்சோறு
வெஞ்சனமெல்லாம் இல்ல...
அள்ளிவச்ச சோறும்
ஆடுகோழி தின்னுபோக
எஞ்சிய மிச்சம்தான்,
என் வயிறும் நிறையுதில்ல...
நல்லநாள் பெரியநாளில்
நாலுகுடம் தண்ணி,
வெல்லமிட்ட சோறு
வேகவச்ச கடலை...
பிள்ளைகள் பந்தடிக்கப்
பேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...
இன்னுமென்ன சொல்ல,
என்னுடைய பெருமையின்னு?
பிள்ளையாரா யிருப்பதற்குப்
பெருச்சாளியே தேவலாம்தான்...
பெருச்சாளியே தேவலாம்தான்...
**************************************
இந்தக் கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க,
இங்கே அழுத்துங்க...
ha..haa ganpathi pappa...
பதிலளிநீக்குCongrats sundhara!
nice kavithai :D
//பிள்ளைகள் பந்தடிக்கப்
பதிலளிநீக்குபேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...//
கவிதையை ரசிக்கிறேன். இளமை விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்.
கைகுட்றா கண்ணா .
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
நச்சுன்னு.
சுரீர்னு.
பழசுக்கு கடிச்ச மாதிரி,
சரக்குக்கு தொட்டுக்கிட்ட மாதிரி.
ரொம்ப பிடிச்சிருக்கு அந்த "பெருச்சாளி" டச்.
அடடா பிள்ளையாருக்கு வந்த கவலைக்கு
பதிலளிநீக்குஎன்ன செய்யறது. அற்புதம் சுந்தரா. ஹா ஹா.
இந்த முடிவை எதிர்பார்க்கலை:)! நல்லா இருக்கு சுந்தரா. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபிள்ளையாரா யிருப்பதற்குப்
பதிலளிநீக்குபெருச்சாளியே தேவலாம்தான்...
:)
அருமையான கவிதை
பதிலளிநீக்குநகைச்சுவையாவும் கவிதையெழுதலாம்ன்னு நிரூபிக்கிறீங்க...
//anu said...
பதிலளிநீக்குha..haa ganpathi pappa...
Congrats sundhara!
nice kavithai :D //
நன்றி அனு :)
//பிள்ளைகள் பந்தடிக்கப்
பதிலளிநீக்குபேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...//
கவிதையை ரசிக்கிறேன். இளமை விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்.//
நன்றிகள் பாலாசி!
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குஇந்த முடிவை எதிர்பார்க்கலை:)! நல்லா இருக்கு சுந்தரா. வாழ்த்துக்கள்.//
:) நன்றி ராமலக்ஷ்மி அக்கா!
//புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்குபிள்ளையாரா யிருப்பதற்குப்
பெருச்சாளியே தேவலாம்தான்...
:)//
வருகைக்கு மிக்க நன்றி
புதுகைத் தென்றல்!
//காமராஜ் said...
பதிலளிநீக்குகைகுட்றா கண்ணா .
அருமையான கவிதை.
நச்சுன்னு.
சுரீர்னு.
பழசுக்கு கடிச்ச மாதிரி,
சரக்குக்கு தொட்டுக்கிட்ட மாதிரி.
ரொம்ப பிடிச்சிருக்கு அந்த "பெருச்சாளி" டச்.//
நன்றி அண்ணா :)
மனசுக்கு உற்சாகமாயிருக்குது.
//வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்குஅடடா பிள்ளையாருக்கு வந்த கவலைக்கு
என்ன செய்யறது. அற்புதம் சுந்தரா. ஹா ஹா.//
நன்றி வல்லிம்மா :)
எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மரத்தடிப் பிள்ளையார் இருந்தார். (இப்ப, தனக்குன்னு கூரை போட்டுகிட்டார்) அவரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இப்படித்தான் தோணும் :)
//பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை
நகைச்சுவையாவும் கவிதையெழுதலாம்ன்னு நிரூபிக்கிறீங்க...//
நன்றி வசந்த்...நகைச்சுவை மட்டுமில்ல, இன்னும் பலசுவைகளில் கவிதை எழுதலாம்னுதான் நினைக்கிறேன்.
அச்சோ பாவம் புள்ளையார்!
பதிலளிநீக்கு