கல்யாண பாக்கியம்!
பொழுது விடியுமுன்னே
நடந்தது பாக்கியத்தின் கல்யாணம்...
அழகாயிருந்த ஒரு
அம்மியை மிதிக்கச்சொல்லி,
அருந்ததியைக் காட்டுகையில்
இருட்டுத்தான் தெரிந்தது...
மெட்டிபோட்ட நிமிஷத்தில்,
அங்கே குட்டிப் பூகம்பம்...
காலில்,
தங்கக்கொலுசு இல்லையென்று
நாத்தனார் குரலெழுப்ப,
கண்ணில் நீர் சுமந்தவளின்
கையைப் பிடித்துக்கொண்டு,
கல்யாண மேடையைக்
கரகரவென்று சுற்றிவந்தது
ஒரு கூட்டம்...
எட்டிநின்றவர்கள் வீசிய பூக்கள்
கிட்டத்திலிருந்தவர்களின்
கோபப் பார்வைபட்டுச்
சுட்டதுபோலிருந்தது அவளுக்கு...
மணமகன் அறைக்குள் வந்ததும்
மாமியார் சொன்னார்,
பாக்கி நகைபோடாம
பால்பழம்கூடக் கிடையாது என்று...
பதைத்துத் திரும்பினாள் பாக்கியம்...
பக்கத்தில்,
பிடித்துவைத்த பிள்ளையாராய்ப்
பேசாமலிருந்தான்,
பத்துநிமிஷம் முன்னால்
அவள்
பாதம் பிடித்த மாப்பிள்ளை!
எப்பொழுதும் போல்
பதிலளிநீக்குஉங்களுக்கு நிகர் நீங்களே
என்பதைச் சொல்லுகிறது கவிதை
கண்முன்னே காட்சியாய் கவிதை
வாழ்த்துகள்
தலைப்பையும்
பதிலளிநீக்குநாயகியின் பெயரையும் இணைத்து எழுதியது வெகு அருமை
வாங்க திகழ்!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி :) நன்றியும் கூட!
கவிதை அருமை
பதிலளிநீக்குசெவுனி அடி என்பார்களே அது இதுதானா ?
பதிலளிநீக்குவாழ்த்துகள்
விஜய்
பாக்கியத்துக்குக் கிடைத்தது பாக்கியம்தானா?
பதிலளிநீக்குஇப்படிப் பிடித்து வைத்தப் பிள்ளையராய்ப் பேசாதிருக்கும் பிள்ளைகள்தான் எத்தனை பேர்?
நல்ல கவிதை சுந்தரா!
//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
பதிலளிநீக்குகவிதை அருமை//
நன்றி உலவு!
/ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குபாக்கியத்துக்குக் கிடைத்தது பாக்கியம்தானா?
இப்படிப் பிடித்து வைத்தப் பிள்ளையராய்ப் பேசாதிருக்கும் பிள்ளைகள்தான் எத்தனை பேர்?
/
உண்மை தான்
//தங்கக்கொலுசு இல்லையென்று
பதிலளிநீக்குநாத்தனார் குரலெழுப்ப,//
//மணமகன் அறைக்குள் வந்ததும்
மாமியார் சொன்னார்,
பாக்கி நகைபோடாம
பால்பழம்கூடக் கிடையாது என்று...//
இவர்களும் பெண்ணாய் பிறந்த பாக்கியவதிகள்தானே...!
பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு//தங்கக்கொலுசு இல்லையென்று
நாத்தனார் குரலெழுப்ப,//
//மணமகன் அறைக்குள் வந்ததும்
மாமியார் சொன்னார்,
பாக்கி நகைபோடாம
பால்பழம்கூடக் கிடையாது என்று...//
இவர்களும் பெண்ணாய் பிறந்த பாக்கியவதிகள்தானே...!//
பெண்களுக்குப் பல இடங்களில் பெண்களேதான் எதிரிகள்...
நன்றி வசந்த்!