காலாவதி மனிதம்!



படம் : நன்றி யூத்ஃபுல் விகடன்


காசுக்கும் பணத்துக்கும்
விலைபோகும் மனிதர்களால்
நாளாக நாளாக
நாடிதளருகிற நம்பிக்கை...

தொட்டுத் துடைத்தாலும்
ஒட்டியதை எடுத்தாலும்
கெட்டுப்போனதெல்லாம்
பணமாகும் புதுவித்தை...

தப்பைச் செய்தவரின்
தலைகாக்கும் பினாமியாய்
கெட்டுப்போய்க் கிடக்கிற
குப்பை மேடுகள்...

காசு கொடுத்து
நம்பிக்கை வாங்கினாலும்
காவு கொள்ளப்படும்
மனித உயிர்கள்...

உயிரைக் கொடுத்தேனும்
நீதிகாத்த நாட்டினில்
உயிரை எடுத்தேனும்
பணம்சேர்க்கும் மனிதர்கள்...

வணிகமயமாகிவிட்ட
வாழ்க்கையின் போக்கினில்
காலாவதியாகிப்போனது
மனிதமும்கூடத்தான்...

கருத்துகள்

  1. //வணிகமயமாகிவிட்ட
    வாழ்க்கையின் போக்கினில்
    காலாவதியாகிப்போனது
    மனிதமும்கூடத்தான்...//

    நெத்தியடி சுந்தரா.

    அப்படித்தான் ஆகிவிட்டது! வேறென்ன சொல்ல:(?

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.

    //வணிகமயமாகிவிட்ட
    வாழ்க்கையின் போக்கினில்
    காலாவதியாகிப்போனது
    மனிதமும்கூடத்தான்...//

    அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. ராமலக்ஷ்மி said...
    //வணிகமயமாகிவிட்ட
    வாழ்க்கையின் போக்கினில்
    காலாவதியாகிப்போனது
    மனிதமும்கூடத்தான்...//

    நெத்தியடி
    //


    அதே

    பதிலளிநீக்கு
  4. நல்லாயிருக்கு சுந்தரா.
    தலைப்பே நல்லயிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. //ராமலக்ஷ்மி said...

    //வணிகமயமாகிவிட்ட
    வாழ்க்கையின் போக்கினில்
    காலாவதியாகிப்போனது
    மனிதமும்கூடத்தான்...//

    நெத்தியடி சுந்தரா.

    அப்படித்தான் ஆகிவிட்டது! வேறென்ன சொல்ல:(?//
    வாங்க ராமலக்ஷ்மியக்கா...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //துபாய் ராஜா said...

    அருமையான கவிதை.

    //வணிகமயமாகிவிட்ட
    வாழ்க்கையின் போக்கினில்
    காலாவதியாகிப்போனது
    மனிதமும்கூடத்தான்...//

    அழகான வரிகள்.//

    துபாய் ராஜாவுக்கு வரவேற்பும் நன்றிகளும்!

    பதிலளிநீக்கு
  7. //அன்புடன் அருணா said...

    அருமை...பூங்கொத்து சுந்தரா!//

    வாங்க அருணா...

    வருகைக்கும் பூங்கொத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சுந்தராவின் கவிதை ஒரு எழுத்தையும் விரயமாக்காத
    வசீகரம்.இந்தக்கவிதையின் தலைப்பும் நடையும் சமகால நடைமுறையை விமர்சிப்பவை. அழகு சுந்தரா.

    பதிலளிநீக்கு
  9. //திகழ் said...

    ராமலக்ஷ்மி said...
    //வணிகமயமாகிவிட்ட
    வாழ்க்கையின் போக்கினில்
    காலாவதியாகிப்போனது
    மனிதமும்கூடத்தான்...//

    நெத்தியடி
    //


    அதே//

    வாங்க திகழ்...நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //அம்பிகா said...

    நல்லாயிருக்கு சுந்தரா.
    தலைப்பே நல்லயிருக்கு.//

    நன்றி அம்பிகா!

    பதிலளிநீக்கு
  11. //காமராஜ் said...

    சுந்தராவின் கவிதை ஒரு எழுத்தையும் விரயமாக்காத
    வசீகரம்.இந்தக்கவிதையின் தலைப்பும் நடையும் சமகால நடைமுறையை விமர்சிப்பவை. அழகு சுந்தரா//

    நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  12. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  13. சுந்தரா வாழ்த்துக்கள்.மிக அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!