பால்சோறும் பழஞ்சோறும்

பிசைந்த பால்சோற்றில்
பசுநெய்யும்போட்டு
பிள்ளைக்குக் கொண்டுவந்து
கிண்ணத்தில் கொடுத்தாள்...

"இன்னைக்கும் பால்சோறா?
எனக்கு வேண்டாம் போ"
கிண்ணத்தைத் தள்ளியது
செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...

தள்ளிவிட்ட பிள்ளையின்
கன்னத்தைக் கிள்ளியவள்
கிண்ணத்தை வீசினாள்
தென்னை மரத்தடியில்...

முகத்தில்
பட்டுத்தெறித்த பால்சோற்றை
ஒற்றைக்கையால் துடைத்தபடி,
அங்கே,
முந்தாநாள் சோற்றை
வெங்காயம் கூட்டித்
தின்றுகொண்டிருந்தது
பாத்திரம் தேய்க்கிற
பொன்னம்மாவின் பிள்ளை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!