கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும்!
ஊருக்கு வருகிறேனென்று
உறவுகளை அழைத்துச்சொல்ல,
ஆளுக்கொரு பொருள்கேட்டு
அடுக்கடுக்காய் அழைப்புகள்...
பவுனாக வாங்கிவந்தால்
பெருமையாக இருக்குமென்று
மாமியார் சொன்னபோது
பணக்கணக்குப் போட்டது மனசு...
அடுத்து,
பேத்தியிடம் கேட்டார்கள்,
இந்தியா வந்ததும்
உனக்கு என்னவேண்டுமென்று...
சின்னமகள் சொன்னாள்,
கோபால் பல்பொடியும்
கொஞ்சம் காரப்பொரியும் என்று!!!
குழந்தையின் மனது
பதிலளிநீக்குவயதானால் வாய்க்காதோ?
ஹை கோபால் பல்பொடி பார்த்ததும் ரொம்ப ஆசையா இருக்கு இனிப்பா கர கரன்னு இருக்கும்,
பதிலளிநீக்குகாலையில கோபால் பல்பொடி திங்கிறதுக்காகவே தேக்கிறவ நான்!! அதுவும், கோபால் பல்பொடி விலை கூடன்னு, ஏபிஸி பல்பொடின்னு ஒண்ணு வாங்குவாங்க எங்கம்மா!! அது இந்தளவு டேஸ்ட் வராது!! ;-))))
பதிலளிநீக்குசூப்பர்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹை.. கோபால் பல்பொடி...
பதிலளிநீக்குஅழகு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
சூப்பர்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றிகள் வாசன் ஐயா!
பதிலளிநீக்குநன்றி ஜலீலா!
நன்றி ஹுசைனம்மா, நானும் உங்கமாதிரிதான் :)
நன்றிகள் மதுரை சரவணன்!
பதிலளிநீக்குநன்றி அமைதிச்சாரல்!
நன்றிகள் அண்ணா!
பதிலளிநீக்குநன்றி தியாவின் பேனா!
உங்களுக்கு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ளேன்
பதிலளிநீக்குஅருமையான கவிதை சுந்தரா
பதிலளிநீக்குமூன்று நாலு வயதில் ஒருநாள் நானும் அண்ணனும் கோபால் பல்பொடியை பாக்கெட்டோடு தண்ணீரில் கலந்து ஷர்பத் போலக் குடித்ததாய் அம்மா சொல்லிச் சிரிப்பார்கள்:)!
பதிலளிநீக்குகாலையில கோபால் பல்பொடி திங்கிறதுக்காகவே தேக்கிறவ நான்!! //
பதிலளிநீக்குஅய்யோ உண்மைய எல்லாம் சொல்லபுடாது :))))))
வாவ்... இன்னும் இந்த பல்பொடி இருக்கா நெஜமா...
பதிலளிநீக்குவாஸ்துவம் தான்... பிள்ளை மனம் எப்பவும் அழகு தான்... பெரிசான தான் நகையும் பணமும் கேக்கும் மனசு