எல்லாம்...அம்மாவால வந்தது!
அப்பா, உனக்கு எப்போ
தொப்பை வந்திச்சு?
உங்கம்மா வந்ததுக்கப்புறம்...
உச்சந்தலையில வழுக்கை?
அதுவும் கூட,
அம்மா வந்தப்புறம்தான்...
கிட்டப்பார்வைக் கண்ணாடி?
எத்தனை தடவை
அதையே நான் சொல்லுறது?
வாசல்ல நிக்கிற வண்டி?
............
'அதுவும் அம்மாவாலன்னு
அழுத்தமாச் சொல்லுங்க'
-அடுப்படியிலிருந்து வந்தது குரல்...
அதெல்லாம்,
சொன்னாப் புரியாது
சீக்கிரம்போய் தூங்கு நீ,
செல்ல மகளை
மெல்ல நகர்த்தினான் அவன்!
படம் : நன்றி http://www.cultureandpublicaction.org
இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குநச்சென்று ஒரு கவிதை!
சுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?
பதிலளிநீக்கு:-)))))))
பதிலளிநீக்குசெம கவிதை....யதார்த்த வரி...கலக்குங்க!!
பதிலளிநீக்கு//velji said...
பதிலளிநீக்குஇப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.
நச்சென்று ஒரு கவிதை!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வேல்ஜி!
//காமராஜ் said...
பதிலளிநீக்குசுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?//
வாங்க அண்ணா...நிஜம்தான் :)
நன்றி!
//ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு:-)))))))//
சிரிச்ச முகத்துக்கு நன்றி ஹுசைனம்மா :)
சமையலறையிலிருந்து வந்த பதில்தான் நெத்தியடி!!!
பதிலளிநீக்குஅதை அவர்களே சொல்ல மனசு வராதே!!!!!