இருளில் புரிந்த பொருள்!

வீட்டைவிட்டு வெளியேறிய 
இரவுநேர மின்சாரம்... 
வேதனையில் தேர்ந்தெடுத்த 
உத்திரத்துக் கொச்சக்கயிறு... 

முடிச்சுக்குள் முகம்நுழைக்கப் 
பார்வையில் பட்டது, 
வெளிச்ச நெருப்பில் 
விழப்போகிற விட்டில் பூச்சி..
 
பளிச்சென்று இறங்கியவன் 
விளக்கணைத்து யோசித்தான், 
பரஸ்பரம் உயிர்காத்த பரிவுடன் 
பறந்தது விட்டில் பூச்சி.

கருத்துகள்

  1. நல்ல செறிவான சிந்தனை.
    நறுக்கெனும் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசம் சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. //காமராஜ் said...

    நல்ல செறிவான சிந்தனை.
    நறுக்கெனும் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.//

    நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  4. // விஜய் said...

    அட்டகாசம் சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    வாங்க விஜய்...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!