ஃபைவ் ஸ்டார்!!!
"அப்பா,
மிச்சம் காசிருந்தா
மூணு ஃபைவ் ஸ்டார்..."
கத்திச்சொல்லிவிட்டுக்
கதவுக்குப்பின்னால்
ஒளிந்துகொண்டது கடைக்குட்டி...
சட்டைப்பை காலியாயிருக்க,
கடனுக்கு அரிசிவாங்கக்
கடைக்குப் புறப்பட்டவன்,
"அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார்,
அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்...
அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க,
அப்புறம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?"
என்று,
இடக்காய்க் கேட்டுவிட்டுத்
திரும்பாமல் நடந்தான்...
திரும்பாமல் நடந்தான்...
சுருங்கிய பிஞ்சின்
முகத்தைப் பார்க்காமலும்,
அரும்பிய கண்ணீரை
அடுத்தவர்க்குக் காட்டாமலும்...
"அப்பா,
பதிலளிநீக்குமிச்சம் காசிருந்தா
மூணு ஃபைவ் ஸ்டார்..."
கத்திச்சொல்லிவிட்டுக்
கதவுக்குப்பின்னால்
ஒளிந்துகொண்டது கடைக்குட்டி...
//
இது பரவாயில்லை
என் பொண்ணு மிச்சம் இருக்கோ இல்லையோ
வாங்கியே ஆகணும் என்பாள்.
கவிதைக்குக் காரணமானது, கஷ்டப்பட்ட வீட்டுப்பிள்ளை தியா...
பதிலளிநீக்குi felt it in my heart. nice :)
பதிலளிநீக்குவறுமை கொடிது, அதைவிட கொடியது அதை பிள்ளைகளிடம் மறைக்க முயன்று தோற்பது... நல்ல கவிதை சுந்தராக்கா.
பதிலளிநீக்குகண்ணீர் துளிகள் கண்ணை மறைக்கிறது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
விஜய்
//"அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார்,
பதிலளிநீக்குஅம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்...
அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க,
அப்புறம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?"
//
‘
வறுமையோடு நக்கலும் கூடவே பிறந்திருக்கிறது தகப்பனுக்கு!
கலங்க வைத்த கவிதை...
பதிலளிநீக்குஇதுவரை படிக்கவில்லை... எப்படியாவது வாங்கிவிடுகிறேன்... முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...
இந்த வறுமையும் அன்பும் இணைபிரியாத்தோழர்கள்.
பதிலளிநீக்கு//அன்னு said...
பதிலளிநீக்குவறுமை கொடிது, அதைவிட கொடியது அதை பிள்ளைகளிடம் மறைக்க முயன்று தோற்பது... நல்ல கவிதை சுந்தராக்கா.//
வாங்க தங்கச்சி, நிஜம்தான்.
//விஜய் said...
பதிலளிநீக்குகண்ணீர் துளிகள் கண்ணை மறைக்கிறது
வாழ்த்துக்கள் சகோ
விஜய்//
வாங்க விஜய், நன்றி!
உங்கள் பைவ் ஸ்டார் மனதைத் தொட்டது..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.