சேலைச் சண்டை

என்றைக்கும்போல,
அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது
சேலைச் சண்டை...

குளித்துத் தலைதுவட்ட
வருத்தம்வந்தால் முகம்புதைக்க,
அம்மா இல்லாத குழந்தைகளுக்கு
அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை
அந்தச் சேலைகள் மட்டுமே...

பச்சைச்சேலை எனக்குத்தானென்று
பற்றியிழுத்த இருவரின் கைகளையும்
விலக்கிவிடும் நோக்கத்தில்
வாசல்வரை வந்துவிட்டு,
உலுக்கிய குரலுக்கு
உள்ளே போனார் அப்பா...

அங்கே,
அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன
இன்னுமொரு சேலையால்.

கருத்துகள்

  1. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சரவணன்!

    பதிலளிநீக்கு
  3. நெகிழ வைத்தது கடைசி வரிகள்... நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  4. அம்மா ஞாபகம் வருது எனக்கும்.மெத்தையைவிட அம்மா மேனி வாசத்தோடு அந்தச் சேலை தரும் சுகமும் தூக்கமும் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!