பிடித்தமாதிரி நடந்துக்கோ
பிரியமாய்ப் பேசு
கழுத்தளவு கவலையென்றாலும்
கண்ணில் அதைக் காட்டாதே...
ஆளப்பிறந்தவன் அவன்
பேணப் பிறந்தவள் நீ
காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால்
கல்லானாலும் கணவன்...
விதவிதமாய் உடுத்திக்கொள்
வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு
வயிற்றின் வாயிலாக
அவன் மனசுக்குள் நுழையப்பார்...
ஆணென்றால் அவன் கொஞ்சம்
அப்படி இப்படித்தான் இருப்பான்,
கட்டிய கணவனையும்
குழந்தைபோல நினைத்துக்கொள்...
சிரித்த முகமென்றால் சீதேவி
சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி
பொறுமையின் சிகரமென்றால் பூதேவி
பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...
கல்யாணம் பேசியதிலிருந்து
கணக்கில்லாத அறிவுரைகள்;
எல்லாவற்றையும் கேட்டவள்
இறுதியாய்ச் சொன்னாள்...
வழிவழியாய்ச் சொல்லுகிற
விதிகளெல்லாம் கடைப்பிடிக்க
வானத்திலிருந்து யாரும்
வரனாக வருவதில்லை...
பயத்தோடு பார்ப்பதற்கும்
பக்குவமாய் நடிப்பதற்கும்
அவன் தலைவன் மட்டுமல்ல,
நன்றும் தீதும்
பகிர்ந்துகொள்ளப் போகும்




