இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கில வாத்தியாரும் அகப்பட்ட பெயரும்!

"எத்தனை எளிதாய்ச் சொல்லிவிட்டாய் அம்மா, பாட்டனின் பெயரமைதல்  பாக்கியம் என்று... நோட்டுப் புத்தகத்தில் எழுதிய  'சின்னத் துரை'யை ஆசிரியர் மாற்றி வாசிக்கின்றார்  சைனா துரை என்று... வகுப்பில் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் கேலி செய்கிறார்கள்..." என்று வாட்டத்துடன் சொன்ன மகனிடம், "முதலில்  வாசிக்கக் கற்றுக்கொள்ளச்சொல்  உன் வாத்தியாரை..." என்றவள் ஓசையின்றிச் சிரித்தாள், "என் பிள்ளை  சைனாவுக்கே துரையாம்ல..." என்று.                             *********

குளக்கரை விடியல் (ஒரு இயற்கை ஓவியம்)

படம்
இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்...  சூரியக்கதிர் வருடச்  செவ்விதழ் விரித்தது  தண்ணீர்க் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது சந்திரனைக் காதலிக்கும் அல்லி...  அல்லிக் குளத்தினில்  வெள்ளிச் சிதறல்கள்  துள்ளித் திரிகிற மீன்கள் ... மீன்களைப் பார்த்ததும்  மோகம் பெருகிவர  மோனத் தவமியற்றும் கொக்கு...  கொக்கிற்குப் போட்டியாய்  குளக்கரையில் தவமிருக்கும்  ஒற்றைக்கால் அரசமரம்...  அரசமரத்தடியில்  அசையா நெடுந்தவம்,  அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை! ********* (இது ஒரு மீள்பதிவு)