ஆங்கில வாத்தியாரும் அகப்பட்ட பெயரும்!

"எத்தனை எளிதாய்ச்
சொல்லிவிட்டாய் அம்மா,
பாட்டனின் பெயரமைதல் 
பாக்கியம் என்று...

நோட்டுப் புத்தகத்தில் எழுதிய 
'சின்னத் துரை'யை
ஆசிரியர்
மாற்றி வாசிக்கின்றார் 
சைனா துரை என்று...

வகுப்பில்
கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும்
கேலி செய்கிறார்கள்..." என்று
வாட்டத்துடன் சொன்ன மகனிடம்,

"முதலில் 
வாசிக்கக் கற்றுக்கொள்ளச்சொல் 
உன் வாத்தியாரை..." என்றவள்
ஓசையின்றிச் சிரித்தாள்,
"என் பிள்ளை 
சைனாவுக்கே துரையாம்ல..." என்று.

                            *********

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!