இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுள் வேலை!

என்னவேலை கொடுத்தாலும் செய்கிறேனென்று வந்தவனிடம் சின்னதொரு வேலைதான் செய்கிறாயா என்றேன்... கண்கள் மின்னக்கேட்டான் "என்ன வேலை சார்?" என்று... நிழலிலே வேலை நேரமெல்லாம் கணக்கில்லை, பிடித்ததைச் சாப்பிடலாம் நினைத்தபோது  தூங்கலாம்... ஏ சி யில் இருக்கலாம், எல்லாச் சேனலும் பார்க்கலாம், ஆசையிருந்தால் பாடலாம், பாடிக்கொண்டே ஆடலாம்... வீட்டுச் செடிகளையும் வளர்க்கிற நாய்களையும் நாட்டமாய்ப்  பராமரித்து நாள்முழுக்க ரசிக்கலாம்... காலையில் காப்பியும் கார்ன் ஃப்ளேக்ஸும் தந்துவிட்டு, மத்தியான சமையலையும் மணி எட்டரைக்குள் முடிக்கலாம்... சாப்பாட்டுக் கூடையில் சமைத்ததை எடுத்துவைத்து, ஆபீசுக்குக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் சிரமமில்லை... எப்போது விருப்பமோ அப்போது சலவைசெய்து, அழுக்கெல்லாம் பெருக்கிக்கூட்டி, அங்கணத்தைச் சுத்தம்செய்து, விருப்பமான தேநீரை நான் வீடுவருமுன் போட்டால்போதும்... இறுக்கம் குறைந்து நறுக்கென்று சுவைப்பதற்கு ரெண்டேரெண்டு மசால் வடை... மற்றபடி, உனக்கும் எனக்கும் சேர்த்து இருக்கிறதில் எளிதான இரவுசமையல் போதும்... விருப்பமென்றால் சொல், வீ