அடிக்கடி சுற்றிவந்த
அந்தக் குருவியைப் பார்த்து,
அடைக்கலங்குருவி கூடுகட்டினால்
அதிர்ஷ்டம் வருமென்று நினைத்து,
அபத்தமாய்ச் சந்தோஷப்பட்டாள் வீட்டுக்காரி...
ஆனால்,
அழிந்து கொண்டிருக்கிற
தன் இனத்திலொன்று
அங்கே
அடைபட்டிருக்கிறதாய் எண்ணி
அங்கே
அடைபட்டிருக்கிறதாய் எண்ணி
அலைந்துகொண்டிருந்தது குருவி...
சுற்றிச் சுற்றிவந்து
சத்தமிட்டுப் பார்த்தது,
செல்லக் குரலெழுப்பி
ஜாடையாகப் பேசியது...
சற்றும் பயனின்றிச்
சத்தமெல்லாம் விரயமாக,
ஒற்றைக் குருவியும்
செத்துப்போனது ஒருநாள்...
அங்கே
கத்திக் கொண்டிருந்தது,
செல்போன் குருவியென்ற
அர்த்தம் புரியாமலேயே...
செல்போன் குருவியென்ற
அர்த்தம் புரியாமலேயே...
******
** சிட்டுக்குருவியைத் தென்மாவட்டங்களில், அடைக்கலங்குருவியென்றும் அழைப்பார்கள்.**




