சுடச் சுடரும் சம்சாரம்??!
காலையில இன்னிக்கு கவிதையொண்ணு எழுதினேன், நாலுவரி படிக்கிறேன் புடிச்சிருக்கா சொல்லுங்க... சட்டைக்குப் பித்தானைத் தச்சு வைக்கச்சொல்லி பத்துநாளாச் சொல்லுறேன், பத்திரிகைக்கு எழுதித்தான் பாழப் போச்சுதுபோ... சந்தைக்குப் போனப்ப அவரைக்காய் வாங்கினேன், உங்களுக்குப் பிடிச்சதுபோல் கறிசமைச்சு வச்சிருக்கேன்... என்னத்த சமைச்சுவச்சு என்னதான் போட்டியோ, ரத்தத்தில் சர்க்கரையும் கொதிப்பும்தான் கூடிப்போச்சு... நல்லபடம் வந்திருக்குன்னு நளினியக்கா சொன்னாங்க, ஞாயித்துக் கிழமையில நாமளும் போகலாமா? நம்மவீட்டுக் கதையவச்சே நாலுபடம் எடுத்துரலாம் இன்னுமென்ன புதுக்கதையை அங்கபோயி பாக்கப்போறே? பள்ளிக்கூட லீவுக்கு பாட்டிவீட்டுக்குப் போவோம்னு புள்ளைக சொல்றாங்க பத்துநாள் போகவா? ஒத்தையா உட்டுட்டு உறவாடக் கேக்குதோ? சோத்தைப் பொங்கினமா வீட்டைப் பாத்தமான்னு 'சிவனே'ன்னு இரு... புள்ளைங்க ரெண்டுபேரும் போயிட்டு வரட்டும்!