மருத்துவமனைப் படுக்கையில் அவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்... அடுக்களையில் தவறிவீழ்ந்து அடிபட்டுக் கிடந்தவளை அடுத்தவீட்டார் ஓடிவந்து மருத்துவ மனையில் சேர்க்க, குடித்துவிட்டு நள்ளிரவில் வீடுவந்தான் கணவன் அவன்... துணையாரு மில்லாமல் நிறைமாதம் சுமந்த அவள் வலிகொண்டு வேதனையில் நிலைகுலைந்து போயிருந்தாள்... அவள் நிலைகண்ட அதிர்ச்சியில் அவனுக்கு மனசைவிடச் சட்டென்று தெளிந்தது போதை... வெளிர்த்த முகமும் துளிர்த்த கண் நீருமாய் அவளைப் பார்க்கையில் என்னவோ செய்தது அவனுக்கு... ஆனால் அவள், துடிக்கவைத்த வலியையும் பொருட் படுத்தாதவளாய், அடுத்து ஒரு பிறவி வந்தால் அதிலும் உங்களோடு வாழவே விருப்பமென்றாள்... "பைத்தியக்காரி... நேற்றுவரை நான் நிறையப் படுத்தினாலும் கேட்கிறாள் பார்" என்று அவன் தனக்குள் வியந்தபோது கேட்காமலே துளிர்த்தது கண்ணீர்... "பிதற்றாமலிரு" என்று அவளை அதட்டிவிட்டு மருத்துவரை அழைக்கிறேன் என்று அவன் எழுந்தபோது, "இதை மட்டும் கேளுங்கள்" என்று கரம்பிடித்து நிறுத்தினாள் அவனை, நின்று திரும்பினான்... அடுத்துவரும் பிறவியில் ஆணாக நானும், நானாக நீங்களும் பிறப்பெடுக்க வேண்ட...