மதிய விடுப்பு!
பத்து நிமிஷம்
தாமதமாய் ஆனதுக்கு
இத்தனை
சத்தம்போட்டிருக்கக்கூடாது...
பார்த்துப் பார்த்து
சமைத்துக் கொடுப்பவள்
அவள்,
என்ன சாப்பிட்டாளென்று
கண்டுகொண்டதில்லை...
படுக்கிறவரைக்கும்
ஓடியாடி உழைக்கிறவள்
உறங்கினாளா என்று
ஒருநாளும் யோசித்ததில்லை...
திறக்க மறுத்த
சாப்பாட்டுப் பாத்திரத்தைத்
வலிந்து திறக்கையில்
உள்ளே
நிறைந்திருந்தது அவள் கைமணம்...
அவள் ஒருவேளை,
அழுதுகொண்டிருப்பாளோ?
திறந்த பாத்திரத்தை
திரும்ப மூடச்சொன்னது மனசு...
முதலாளி திட்டினாலும்
பரவாயில்லை,
இன்று, மதியச்சாப்பாடு
மனைவி கூடத்தான்!
தாமதமாய் ஆனதுக்கு
இத்தனை
சத்தம்போட்டிருக்கக்கூடாது...
பார்த்துப் பார்த்து
சமைத்துக் கொடுப்பவள்
அவள்,
என்ன சாப்பிட்டாளென்று
கண்டுகொண்டதில்லை...
படுக்கிறவரைக்கும்
ஓடியாடி உழைக்கிறவள்
உறங்கினாளா என்று
ஒருநாளும் யோசித்ததில்லை...
திறக்க மறுத்த
சாப்பாட்டுப் பாத்திரத்தைத்
வலிந்து திறக்கையில்
உள்ளே
நிறைந்திருந்தது அவள் கைமணம்...
அவள் ஒருவேளை,
அழுதுகொண்டிருப்பாளோ?
திறந்த பாத்திரத்தை
திரும்ப மூடச்சொன்னது மனசு...
முதலாளி திட்டினாலும்
பரவாயில்லை,
இன்று, மதியச்சாப்பாடு
மனைவி கூடத்தான்!
கவிதை நல்லா இருக்கு சுந்தரா .
பதிலளிநீக்கு//படுக்கிறவரைக்கும்
பதிலளிநீக்குஓடியாடி உழைக்கிறவள்
உறங்கினாளா என்று
ஒருநாளும் யோசித்ததில்லை...//
நிச்சயமாக யாரும் யோசிப்பதில்லை...
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குஅருமை சுந்தரா!
//முதலாளி திட்டினாலும்
பரவாயில்லை,
இன்று, மதியச்சாப்பாடு
மனைவி கூடத்தான்!//
அப்படிப் போடு! கவிநாயகனைச் சொன்னேன்:)!
January 25, 2010 5:18 PM
அருமையான கவிதை சகோதரி.
பதிலளிநீக்குவர வர தூள் கிளப்புறீங்க
பதிலளிநீக்குயதார்த்த கவிதைகள் உங்களிடம் மட்டுமே கிடைக்கிறது
விரைவில் தொகுப்பாக வெளியிடுங்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
//காமராஜ் said...
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு சுந்தரா //
நன்றி அண்ணா!
// Sangkavi said...
பதிலளிநீக்கு//படுக்கிறவரைக்கும்
ஓடியாடி உழைக்கிறவள்
உறங்கினாளா என்று
ஒருநாளும் யோசித்ததில்லை...//
நிச்சயமாக யாரும் யோசிப்பதில்லை...//
நன்றி சங்கவி!
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குஅருமை சுந்தரா!
//முதலாளி திட்டினாலும்
பரவாயில்லை,
இன்று, மதியச்சாப்பாடு
மனைவி கூடத்தான்!//
அப்படிப் போடு! கவிநாயகனைச் சொன்னேன்:)!//
நன்றி அக்கா!
//வெ.இராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குஅருமையான கவிதை சகோதரி.//
நன்றி ரங்கன்!
//விஜய் said...
பதிலளிநீக்குவர வர தூள் கிளப்புறீங்க
யதார்த்த கவிதைகள் உங்களிடம் மட்டுமே கிடைக்கிறது
விரைவில் தொகுப்பாக வெளியிடுங்கள்
வாழ்த்துக்கள்
விஜய்//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் விஜய்!