ஈரம்
ஈரவாசனை படர்ந்திருந்தது
அந்தக் கூரைக் குடிசையின்
எல்லாப் பக்கமும்...
கோரைப்பாயும் ஈரக்கோணியும்
அதனதன் பங்குக்கு
வாசனை பரப்ப,
அரிசிப் பானைக்குள்
அடிவரைக்கும் துழாவி,
உரசிக் கிடைத்த
ஒன்றிரண்டு மணிகளை,
வாசல் குருவியின்
வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு,
ஈரச் சட்டையுடன்
சோகைப்பிள்ளை சிரிக்க,
உள்ளே,
மூத்திர ஈரத்தில் அழுதது,
சேலைத் தொட்டிலில்
சின்னப் பிள்ளை...
மாசம் முடியுமுன்னால்
முன்பணம் கேக்குதா?
நாசமாய்ப் போச்சுதென்று
ஓசைஉயர்த்திய எஜமானியிடம்,
ஈரத்தால் வெளுத்த
இருகையும் பிசைந்தபடி,
வாரேம்மா என்றபடி,
வெளியிறங்கி நடந்தவளின்
வீட்டுக்குள் அன்றைக்குக்
காய்ந்து கிடந்தது,
ஓரத்து விறகடுப்பும்,
ஒன்றிரண்டு வயிறுகளும்...
**********
படம் : இணையத்திலிருந்து
**********
படம் : இணையத்திலிருந்து
கவிதை மிகவும் அருமை
பதிலளிநீக்குதொடருங்கள் ..
ஈரமில்லா நெஞ்சுகளால் வற்றிப்போன வறுமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
விஜய்
அருமையான எழுத்தோட்டம் ...
பதிலளிநீக்குநல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்
வறுமையின் தாண்டவம் வரிகளின் வழியே!
பதிலளிநீக்குநல்லாயிருக்கு சகோ!
//ஈரத்தால் வெளுத்த
பதிலளிநீக்குஇருகையும் பிசைந்தபடி,
//
எங்கள் மனதையும் பிசைந்து விட்டது கவிதை.
//Meena said...
பதிலளிநீக்குகவிதை மிகவும் அருமை
தொடருங்கள் ..//
வாங்க மீனா, உங்க முதல் வருகைக்கு என் வரவேற்புகளும் நன்றியும்!
//விஜய் said...
பதிலளிநீக்குஈரமில்லா நெஞ்சுகளால் வற்றிப்போன வறுமை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்//
வாங்க சகோ, மிக்க நன்றி!
//அரசன் said...
பதிலளிநீக்குஅருமையான எழுத்தோட்டம் ...
நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அரசன்!
//Balaji saravana said...
பதிலளிநீக்குவறுமையின் தாண்டவம் வரிகளின் வழியே!
நல்லாயிருக்கு சகோ!//
வாங்க சரவணன், நன்றி!
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்கு//ஈரத்தால் வெளுத்த
இருகையும் பிசைந்தபடி,
//
எங்கள் மனதையும் பிசைந்து விட்டது கவிதை.//
வாங்கக்கா, நன்றி!
ஏழ்மையை மிக நன்றாக, ஆழமாகப் படம் பிடித்து காட்டுகிறது உங்கள் கவிதை
பதிலளிநீக்கு