படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் சருகு, நீளமான மழைநாளில் நிமிஷநேரச் சூரியன், தூரிகையில் மாயம்செய்யும் துளியளவு தண்ணீர், மனம்நிறைந்த மகிழ்ச்சியில் முகிழ்த்துவரும் கண்ணீர், இருளணிந்த மலையினில் எங்கோ தெரியும் விளக்கு... கருநீல வானத்தில் கதிர்முளைக்கும் கிழக்கு, வழிநடந்த பாதத்தை வருடிவிடும் புல்மடி, மார்கழிப் பூக்களின் மடிதுயிலும் மென்பனி, கூடித்திளைத்த பின் கொஞ்சநேரத் தனிமை, காதலின் மொழியோடு கலந்துவரும் ஒருமை, இவையனைத்தும் ரசித்தபின்னும் எழுதுவதைக் கவிதையென்பது எந்த ஊர் நியாயம்? ***
முதுமை முகத்திலறைகிறது
பதிலளிநீக்குநல்ல கவிதை!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...முதல் வருகைக்கும் சேர்த்து.
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்குதிரைகட லோடி
அன்று
திரவியம் தேடிவைத்த
துலுக்காணக் கிழவரின்
அழுக்கான பாத்திரம்
நிரம்பிக் கிடக்கிறது,
மிச்சச் சோறும்
கொச்சை வசவுகளுமாக...
///
முதியவர்கள் பற்றிய கவிதை கண்களில்
நீர் பனிக்கிறது
வாங்க தியாவின் பேனா...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றிகள்!
முதுமையின் கொடுமை, அதை அனுபவிக்கும் முன்பே கண்களில் தெரிகிறது,,
பதிலளிநீக்குநல்ல கவிதை..
வாங்க மலிக்கா...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
அடிக்கடி வாங்க...