முடியாத துயரம்
இவை,
எல்லாம் கடந்துபோகும்,
இயல்பாயிரு என்றார்கள்...
இருந்து பார்த்தாள்,
இயலவில்லை...
ஆடுகிற மாட்டை ஆடியும்
பாடுகிற மாட்டைப் பாடியும்
படியவைக்கலா மென்றார்கள்...
முயன்று பார்த்தாள்,
முடியவில்லை...
வேதனையாயிருந்தால்
கொஞ்சம் விலகியிரு...
விலக விலகத்தான்
விருப்பம் வருமென்றார்கள்...
விலகியும் பார்த்தாள்,
ஆனால்,
வெறுப்பைத் தவிர
வேறெதுவும் வரவில்லை...
இறுதியில்
விட்டு விலகி
வெளியில் வந்தபின்தான்
விபரம் புரிந்தது,
அது
வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுகிற
சொந்தம் மட்டுமல்ல,
எட்டியிருந்தாலும் குத்திக்கிழிக்கிற
எந்திரமும் தானென்று!!!
விழுங்கவும் முடியாத, துப்பவும் முடியாத ஒரு பழம் :-)))
பதிலளிநீக்குஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை.
பதிலளிநீக்குவரிகள் அருமை
பதிலளிநீக்கு//அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்குவிழுங்கவும் முடியாத, துப்பவும் முடியாத ஒரு பழம் :-)))//
வாங்க சாரல்,நன்றி!
// Chitra said...
பதிலளிநீக்குஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. //
வாங்க சித்ரா நன்றி!
//THOPPITHOPPI said...
பதிலளிநீக்குவரிகள் அருமை //
நன்றி தொப்பி தொப்பி!
//வெந்த புண்ணில்
பதிலளிநீக்குவேலைப் பாய்ச்சுகிற
சொந்தம் மட்டுமல்ல,//
ஆழமான,அர்த்தமுள்ள கவிதை..
வேறு தலைப்பு கொடுத்திருந்தால் கடைசி வரி அதிர்ச்சி கொடுப்பதாக இருந்திருக்கும் என தோணுகிறது.
பதிலளிநீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குநன்றி பாரதி :)
பதிலளிநீக்குநன்றி ஜலீலா :)