இடுகைகள்

காதல் பூப்பூக்கட்டும்...

மாடி வீட்டில், கோடி வீட்டில், ஏழை வீட்டில், எதிர்த்த வீட்டில், எங்கே வேண்டுமானாலும் காதல் பூப்பூக்கட்டும்... என்வீட்டுச் சுவற்றுக்குள் எப்போதும் வேண்டாம் சாமீ... கண்மூடி வேண்டினார் காதலித்து மணந்த தந்தை!!!

விடுதலை நாள்!!!

குண்டு துளைக்காத கண்ணாடி மேடை கண்கொத்திப் பாம்பாய் நாற்புறமும் காவலர்கள் குண்டுகள் முழங்கி அதிரும் ஒலியெழும்ப, எந்த நிமிடத்தில் எறிகணை விழுமோஎன்று அச்சத்தில் விரல்நடுங்க விடுதலைக் கொடியேற்ற, உச்சத்தில் படபடக்கும் கொடியுடன் இதயம்கூட!!!

** வண்ணத்துப்பூச்சி விருது **

படம்
என்னுடைய கிறுக்கல்களுக்கும் மதிப்பளித்து இந்த விருதினை எனக்கு வழங்கிய தமிழ்ப் பிரியரான திகழ்மிளிருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இவரது வலைத்தளத்தின் அமைப்பும், அதில் இடும் படங்களும் என்னை மிகவும் ரசிக்கவைத்த விஷயங்கள். எனக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியை நான் தேடிப்படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்கு வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கிருத்திகா , அனுபவங்களாகட்டும் கவிதைகளாகட்டும் சொல்லவந்ததைச் சிறப்பாகச்சொல்லும் இவரது பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். துளசி கோபால் , டீச்சர் என அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் இவருடைய பதிவுகள், நகைச்சுவையாகவும் அதேசமயத்தில் பள்ளிக்குழந்தைகளுப் பொறுமையுடன் சொல்லித்தருவதுபோலவே படங்களும் விளக்கங்களுமாய் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். நாவிஷ் செந்தில்குமார் , முத்தமிழ்மன்றத்திலிருந்தே இவரது கவிதைகள் பரிச்சயம் எனக்கு. கதைசொல்லும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.அருமையாக எழுதுகிறார். அருமையான இந்த வாய்ப்பினை வழங்கிய திகழ்மிளிருக்கு மீண்டும் என் நன்றிகள்!

மழைவிழும் எழில்வனம்

படம்
மழைக் காற்றது மூங்கில்வழி நுழையும் ஒலி கேட்கும் இசைகேட்டிட மகிழ்வில் தரு வகைகள் தலையாட்டும் இதழின் வழி மதுவோடிட இலையும் நிலை தளரும் கிளை யாடிய மலர்கள்பல மண்ணின் மடியுதிரும் வழியும்இசை பரந்தோடிட மகிழும் உயிரினங்கள் வழிமாறிட மலைப்பாறையில் வதியும் குருகினங்கள் துளியும்விழத் தோகைமலர் விரிக்கும் மயிலினங்கள் ஒளியும்செல ஓசையுடன் பிளிரும் களிறினங்கள் ஊதும்இசை யொலிகேட்டிட அதிரும் எழில்மேகம் காதில்குளிர் வாடைதொடத் தழுவும் இளமானும்... மன்றின்மழை பெரிதாகிட வெளியில் வரும்நாகம் கொன்றைமலர் விரிபோர்வையில் களித்தே நெளிந்தாடும்... கண்டேயதன் எழிலில்மிக மையல்கொடு தானும் வண்டாடிடும் மலர்த்தூளியில் கவியும் விளையாடும்... கொண்டாடிடும் மழைநாளதன் கோலம்நிறை அழகில் உண்டோ அதன் நிகராய் மற்றெதுவும் இவ்வுலகில்?

ராட்சசியோ நீ ???...

படம்
நாலு வருஷங்களாய் நடக்கவிடாமல் எனைத் தோளில்சுமந்த தந்தை கீழே இறக்கிவிட்டு, ஆனை அம்பாரியென உனைச் சுமந்து ரசித்திருக்க, பாலோடு அன்னமிட்டு பாசமாய்க் கொடுத்தஅன்னை நாலு வயசாச்சு நல்லா வளர்ந்தாச்சு வேலையிருக் கெனக்கு நீயாகச் சாப்பிடென, எனக்கான உறவுகளை உனதாக்கிப் பகிர்ந்துகொண்டு கணப்பொழுது நகர்ந்தாலும் கணக்குப் புத்தகத்தைக் கிறுக்கிக் கிழிக்கின்றாய் சிரிக்கின்றார் அதை ரசித்து... என் பின்னாலே நடந்துவந்து பள்ளியிலே சேர்ந்த நீயும், மதிப்பெண் முன்னாலே பெற்று எனைப் பின்னாலே தள்ளிவிட்டாய்... அண்ணா என்றழைத்தபடி என்வகுப்பில் நுழைந்து நீயும் கண்ணாலே நோட்டமிட்டு கடைசி இருக்கையென்று வீட்டில், சொல்லாத பெருமையெல்லாம் சொல்லி அழவைத்தாய்... பாட்டு வகுப்போடு பரத நாட்டியமும் பள்ளிப் படிப்போடு பதவிசாய்ப் படித்துவிட்டுப் பதக்கங்கள் வாங்கினாய் நீ, பாட்டு வாங்கினேன் நான்... கல்லூரி வயசினில் நான் காதலுடன் கவியெழுத, நான் இல்லாத பொழுதிலதை எடுத்து கொடுத்துவிட்டு, நல்லவளாய்ப் பேரெடுத்தாய் நந்தியாயென் வழியில்நின்றாய்... கல்யாணச் சந்தையிலே கனக்க நகைபோட்டு ஆட்டுக்கல் அம்மியோடு அனைத்துவகைச் சீரும்செய்ய, தோட்டம் துரவென்று அத...

முடிச்சவிழ்த்தான் முகுந்தனவன்!!!

படம்
துடித்த உதடுகள் அடக்கிய வார்த்தையை எடுத்து மறுபடியும் சொல்லுகின்றாள் சுசீலையவள்... அடுத்துவரும் வார்த்தை என்னவாய் இருக்குமென்று நடுக்கமாய்க் கணவனின் முகக்குறிப்பைப் பார்த்துநின்றாள்... எத்தனை வருஷமாச்சு, என்நிலையும் வறுமையாச்சு இத்தனைநாள் இல்லாமல் இல்லாமை தகித்தவுடன், அட்டமியில் அவதரித்த கிருஷ்ணனைப்போய் பார்ப்பதற்கும் வெட்கமா யிருக்குதடி, வேதனையும் தோன்றுதடி... என்று பதிலுரைத்தான் இயலாமை எடுத்துரைத்தான் வழி யொன்றுமறியாமல் வாய்மூடி நின்றவளைக் கண்டு மனம்வருந்திக் கண்விழிநீர் துளிர்த்தவனாய் நின்றான் குசேலன் நெடிதுயிர்த்தான் வார்த்தையின்றி... பண்டு குருகுலத்தில் பழகிய கண்ணனவன் இன்று துவாரகையின் மன்னனாய்த் திகழ்கின்றான் கொண்டுபோய் அவனிடத்தில் அன்போடு கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்னிடத்தில் என்றவனும் மருகிநிற்க, ஒன்றும் எதிருரைக்க இயலாமல் தளர்ந்தவளாய்ச் சென்று சிறிதவலைக் கொண்டுவந்த மாதரசி, நன்றாய் அவலதனைத் துண்டினில் முடித்துக்கட்டி, தந்தாள் கணவனிடம் செல்லுங்கள் என்றுரைத்தாள்... சென்றான் குசேலனவன் சோர்வுற்ற நடையுடனே கண்டான் கண்ணவன் தாவிவந்து ...

காலச் சுவடுகள்

படம்
அவள், வழிமறந்த கோவலனைப் பழிவாங்க முயலாமல் வழிமாற்றிப் பிள்ளைகளைப் பழியின்றி வளர்த்த அன்னை... கல்லும் மண்ணுமாய்க் கலந்து கட்டிய வீட்டை தன் சொல்லாலும் செயலாலும் சொர்க்கமாக்கிக் காட்டியவள்... அவள், கையளவு அரிசியுடன் உப்பிட்டுக் கஞ்சிகாய்ச்சி, கைபொறுக்கும் சூட்டில் ஊட்டிவிட்ட சுவையதனில் நெய்யிட்ட பால்சோறும் தோற்றுப்போய் ஓடிவிடும்... வாடா என்றருகிருத்தி வாஞ்சையாய்க் கரம்பிடித்து கூடாத நட்புடனே கூடாதே என்றுரைக்க, இன்று, கோடானு கோடி கொடுப்பவர் வந்தாலும் மீறாமல் நிற்கும்பிள்ளை மாயமோ அவளின் வார்த்தை? அன்று, இல்லாமை என்றவொன்று இருந்ததே தெரியாமல் வெள்ளாமைக் காட்டில் வேலைசெய்து உடல்மெலிந்தும் கல்லாமை இல்லாமல் பிள்ளைகளை வளர்த்துவிட்டு, அன்னையென்ற தெய்வமொன்று இல்லாத குறையன்றி இல்லாமை ஏதுமின்றி இமயமாய் நிற்கின்ற பிள்ளைகளின் புகழைமட்டும் காணாமல் போய்விட்டாள்... அன்னையின் நினைவுகளை அடிமனதில் சுமந்தபடி கண்ணீரின் சுவடுகளை கதவுக்குள் பூட்டிவிட்டு, நாடுவிட்டுப் போனபிள்ளை தேடிவந்தான் சுவடுகளை... கூடுகட்டி வாழ்ந்ததுபோல் குளிரிலும் மழையினிலும் அன்னையின் ...