Saturday, September 18, 2010

இருளில் புரிந்த பொருள்!

வீட்டைவிட்டு வெளியேறிய
இரவுநேர மின்சாரம்,
வேதனையில் தேர்ந்தெடுத்த
உத்திரத்துக் கொச்சக்கயிறு...

முடிச்சுக்குள் முகம்நுழைக்கப்
பார்வையில் பட்டது,
வெளிச்ச நெருப்பில்
விழப்போகிற விட்டில்பூச்சி...

பளிச்சென்று இறங்கியவன்
விளக்கணைத்து யோசித்தான்,
பரஸ்பரம் உயிர்காத்த
பரிவுடன் பறந்தது விட்டில்.

4 மறுமொழிகள்:

காமராஜ் said...

நல்ல செறிவான சிந்தனை.
நறுக்கெனும் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.

விஜய் said...

அட்டகாசம் சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

சுந்தரா said...

//காமராஜ் said...

நல்ல செறிவான சிந்தனை.
நறுக்கெனும் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.//

நன்றிகள் அண்ணா.

சுந்தரா said...

// விஜய் said...

அட்டகாசம் சகோ

வாழ்த்துக்கள்

விஜய்//

வாங்க விஜய்...

மிக்க நன்றி!

Post a Comment

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)

LinkWithin

Related Posts with Thumbnails