அம்மா உனக்காக...
அழைக்கச் சலிக்காத
அன்பின் மறுபெயர்
உழைத்து எனை உயரவைத்து
ஊக்குவிக்கும் ஓருயிர்
விளக்கிவைத்த திருவிளக்காய்
ஒளிரச்செய்து என் வாழ்க்கை
தளர்ச்சியின்றிச் செல்ல
தவமிருந்த என்தாயே..
வயிற்றையும் மனசையும்
வாட விடாமல்
மழையெனக் குளிர்விக்கும்
நீ எனக்கு ஒரு
மகிழ்ச்சியின் மென்பொருள்
உறக்கம் வரும்வரைக்கும்
உன்மடியில் படுத்தபடி
விரல்கள் தலைவருடக்
கேட்ட கதையெல்லாம்
இன்று,
எனக்குநானே மனதுக்குள்சொல்லி
தைரியத்தை விதைக்கக்
கற்றுக்கொடுத்தவள் நீ
எட்ட இருந்தாலும்
மொத்தக் குடும்பத்தையும்
கட்டி யணைத்திடும்
உன் அன்பெனும் கயிற்றுக்கு
காட்டுப்படாதவர் யாருமேஇல்லை
கிட்ட இருக்கையில்
புரியாத உன் பெருமைகூட
இன்று
எட்ட இருக்கையில்
உணர்கிறேன் தாயே...
அன்று,
கல்லூரி விடுதியில்
காலம் கழித்தபோது
அர்த்தமே இல்லாமல்
உன்னோடு சண்டையிட்டு
எதுவுமே பேசாமல்
அழவைத்த நாட்களுண்டு...
இன்று,
செய்த தவறுக்குத் தண்டனையாக
ஏழாம் நாளில்
உன் குரலைக் கேட்பதற்காக
ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
ஆவலுடன் இங்கு
காத்துக் கிடக்கிறேன் அம்மா...
அன்பின் மறுபெயர்
உழைத்து எனை உயரவைத்து
ஊக்குவிக்கும் ஓருயிர்
விளக்கிவைத்த திருவிளக்காய்
ஒளிரச்செய்து என் வாழ்க்கை
தளர்ச்சியின்றிச் செல்ல
தவமிருந்த என்தாயே..
வயிற்றையும் மனசையும்
வாட விடாமல்
மழையெனக் குளிர்விக்கும்
நீ எனக்கு ஒரு
மகிழ்ச்சியின் மென்பொருள்
உறக்கம் வரும்வரைக்கும்
உன்மடியில் படுத்தபடி
விரல்கள் தலைவருடக்
கேட்ட கதையெல்லாம்
இன்று,
எனக்குநானே மனதுக்குள்சொல்லி
தைரியத்தை விதைக்கக்
கற்றுக்கொடுத்தவள் நீ
எட்ட இருந்தாலும்
மொத்தக் குடும்பத்தையும்
கட்டி யணைத்திடும்
உன் அன்பெனும் கயிற்றுக்கு
காட்டுப்படாதவர் யாருமேஇல்லை
கிட்ட இருக்கையில்
புரியாத உன் பெருமைகூட
இன்று
எட்ட இருக்கையில்
உணர்கிறேன் தாயே...
அன்று,
கல்லூரி விடுதியில்
காலம் கழித்தபோது
அர்த்தமே இல்லாமல்
உன்னோடு சண்டையிட்டு
எதுவுமே பேசாமல்
அழவைத்த நாட்களுண்டு...
இன்று,
செய்த தவறுக்குத் தண்டனையாக
ஏழாம் நாளில்
உன் குரலைக் கேட்பதற்காக
ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
ஆவலுடன் இங்கு
காத்துக் கிடக்கிறேன் அம்மா...
//
பதிலளிநீக்குகிட்ட இருக்கையில்
புரியாத உன் பெருமைகூட
இன்று
எட்ட இருக்கையில்
உணர்கிறேன் தாயே...//
கவிதை உணர்வு பூர்வமா இருக்குங்க:)
//உறக்கம் வரும்வரைக்கும்
பதிலளிநீக்குஉன்மடியில் படுத்தபடி
விரல்கள் தலைவருடக்
கேட்ட கதையெல்லாம்
இன்று,
எனக்குநானே மனதுக்குள்சொல்லி
தைரியத்தை விதைக்கக்
கற்றுக்கொடுத்தவள் நீ//
அருமையாய் கவிதையில கலக்கறிங்க,..:)
//இன்று,
பதிலளிநீக்குசெய்த தவறுக்குத் தண்டனையாக
ஏழாம் நாளில்
உன் குரலைக் கேட்பதற்காக
ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
ஆவலுடன் இங்கு
காத்துக் கிடக்கிறேன் அம்மா...//
இப்போலாம் வேற நாட்டுல இருந்தாலும் தினமும் பேச முடிகிறதே.:)
அருமையா உணர்வுகளை சொல்லறிங்க, வாழ்த்துக்கள். தொடருங்க:)
நன்றி ரசிகன்
பதிலளிநீக்குஅம்மாவை நினைத்தாலே மனசு அன்பின் அரவணைப்புக்கு ஏங்குவது இயல்புதானே...
தொடர்ச்சியான உங்கள் வரவேற்பிற்கு என் வணக்கங்கள்.
/இன்று,
பதிலளிநீக்குசெய்த தவறுக்குத் தண்டனையாக
ஏழாம் நாளில்
உன் குரலைக் கேட்பதற்காக
ஆறு நாளும் ஆசையைத்தேக்கி
ஆவலுடன் இங்கு
காத்துக் கிடக்கிறேன் அம்மா.../
பாசம் கூட
பிரிவில் தான்
தெரிகிறது
நிஜம்தான் திகழ்மிளிர்...
பதிலளிநீக்குஒருவகையில் பிரிவுதான் பாசத்தை இன்னமும் வலுப்படுத்துகிறது என்றே சொல்லலாம்.
நன்றி.
அன்பின் அடர்த்தியைச் சொல்லும் அருமையான கவிதை சகோதரி.
பதிலளிநீக்குஅம்மாவைப் பற்றி எழுத ஆயுசு போதாதே...
பதிலளிநீக்குகருத்துக்கு ரன்றி ரங்கன்.