வீதியோர விசும்பல்கள்...
கிழிசல் கோணிக்குள்
பசிபோர்த்திய இரவுகள்
விழியோடு தேங்கிவிட்ட
வேதனையே கனவுகளாய்...
வழியோரத் திண்ணைகளே
உறங்கிடும் பள்ளியறை
பழியாகி வலியெடுக்கும்
அனாதையெனும் அவச்சொல்...
பக்கத்தில் படுத்திருக்கும்
பழகிய நாய்க்குட்டி
பசியோடு விலகாத
பாசமும் சுமந்தபடி...
வயிற்றுக்குள் எழுந்தபசி
சுழற்றிச் சிறுகுடலை
முறுக்கிய நோவின்வலி
விழிகளில் நீராக...
சம்பந்தன் அழுதகணம்
சடுதியில் எதிரில்வந்து
செம்பொன் குவளையில்
ஞானப்பால் கொடுத்தவளே
பந்தம் எனக்கிலையோ
பாவமென்று தோணலையோ
இன்னல்கண்ட ஏழைக்கும்
இரங்கிட மாட்டாயோ...
//பந்தம் எனக்கிலையோ
பதிலளிநீக்குபாவமென்று தோணலையோ
இன்னல்கண்ட ஏழைக்கும்
இரங்கிட மாட்டாயோ...//
அருமையா இருக்குங்க... உணர்வுகளை சொன்ன விதம்.
வாங்க ரசிகன்...
பதிலளிநீக்குஉங்க ரசனைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
சம்பந்தன் அழுதகணம்
பதிலளிநீக்குசடுதியில் எதிரில்வந்து
செம்பொன் குவளையில்
ஞானப்பால் கொடுத்தவளே
பந்தம் எனக்கிலையோ
பாவமென்று தோணலையோ
இன்னல்கண்ட ஏழைக்கும்
இரங்கிட மாட்டாயோ..
அருமையான வரிகள்.....